இன்று உலக வானளாவிய கட்டட தினம்

03-செப்-2025

உயரமான கட்டடங்கள் தொடர்பான உலக வானளாவிய தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 3 அன்று அனுசரிக்கப்படுகிறது.

03-செப்-2025

ஒரு நாட்டின் பிரமாண்டத்தை காட்டுவதில் வானுயர்ந்த கட்டடங்கள் என அழைக்கப்படும் 'ஸ்கைகிராப்பர்' முக்கிய பங்காற்றுகின்றன.

03-செப்-2025

பழங்காலத்தில் அமைக்கப்பட்ட எகிப்து பிரமிடு முதல் தற்கால வானளாவிய கட்டடங்கள் பிரமிக்க வைக்கின்றன.

03-செப்-2025

'ஸ்கைகிராப்பர்' தந்தை என அழைக்கப்படும் அமெரிக்காவின் லுாயிஸ் சுலிவான் பிறந்த தினமான செப். 3, உலக ஸ்கைகிராப்பர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

03-செப்-2025

கின்னஸ் சாதனை புத்தக தகவலின் படி, உலகின் முதல் ஸ்கைகிராப்பர் கட்டடம் 1885ல் அமெரிக்காவின் சிகாகோவில் அமைக்கப்பட்டது. உயரம் 138 அடி.

03-செப்-2025

தற்போது உலகின் உயரமான கட்டடம் துபாயின் புர்ஜ் கலிபா. உயரம் 2722 அடி. 2010 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி திறக்கப்பட்டது.

03-செப்-2025

இந்த நாளில் மக்கள் பிரபல வானளாவிய கட்டடங்களில் ஏறி, லிஃப்டில் சென்று, அதன் சிறப்புகளைப் பற்றி அறிந்துகொள்கிறார்கள்.

03-செப்-2025