மூளையை தின்னும் அமீபா பரவல்: சபரிமலை பக்தர்கள் உஷார்

16-நவ்-2025

சபரிமலையில், இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை காலம் நாளை துவங்குகிறது. இதற்காக இன்று மாலை 5:00 மணிக்கு அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.

16-நவ்-2025

இந்நிலையில், கேரளாவில் சில இடங்களில், 'அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்' என்ற நோய் பரவி வருகிறது.

16-நவ்-2025

இது, மூளையை தின்னும் அமீபா என அழைக்கப்படுகிறது. அதனால், கேரள சுகாதாரத்துறை, சபரிமலை வரும் அய்யப்ப பக்தர்களுக்காக சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

16-நவ்-2025

சபரிமலை வரும் வழியில், ஆறுகளில் குளிக்கும் போது, மூக்குக்குள் நீர் செல்லாமல் பக்தர்கள் கவனமாக இருக்க வேண்டும்

16-நவ்-2025

ஏற்கனவே உள்ள பிரச்னைகளுக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள், அவற்றை தொடர்ந்து சாப்பிட வேண்டும்

16-நவ்-2025

மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள், அதற்கான ஆவணங்கள் மற்றும் மருந்துகளுடன் பயணிப்பது அவசியம்

16-நவ்-2025

சபரிமலை யாத்திரை புறப்படும் முன், நடைபயிற்சி போன்ற எளிதான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்

16-நவ்-2025

மலை ஏறும் போது மெதுவாகவும், இடைவெளி விட்டும் ஏற வேண்டும்

16-நவ்-2025

கொதிக்க வைத்த நீரையே குடிக்க வேண்டும். உணவு சாப்பிடும் முன் கைகளை கழுவ வேண்டும்.

16-நவ்-2025

மேலும், அவசர மருத்துவ உதவிக்கு 04735 203232 என்ற எண்ணை தொடர்பு கொள்ள, அய்யப்ப பக்தர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

16-நவ்-2025