வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அழைக்கிறது... சீசன் துவங்கியாச்சு!!

22-ஜன-2025

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உலக புகழ் பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. சென்னை-செங்கல்பட்டு ரோட்டில், கூட்டுரோடு பிரிவு வழியாக இங்கு செல்லலாம்.

22-ஜன-2025

இங்குள்ள ஏரி 86 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக, 16 அடி உயரம் நீர் பிடிப்பு கொண்டு ஏரி முழு கொள்ளளவு கொண்டுள்ளது.

22-ஜன-2025

பங்களாதேஷ், பர்மா, இலங்கை, சைபிரியா, ஆஸ்திரேலியா, மியான்மர் என பல நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் பறவைகள் வலசையாக வழக்கம் போல வந்துள்ளன.

22-ஜன-2025

வருகை தருவதன் நோக்கம் இங்குள்ள இதமான காலசூழ்நிலையில் தனது இணையுடன் தங்கி இனப்பெருக்கம் செய்து திரும்புவதுதான். செப்., கடைசி வாரத்தில், பறவைகள் வலசை வர துவங்குகின்றன.

22-ஜன-2025

டிச, ஜன, பிப்., மாதத்தில் வலசை வரும் பறவைகளின் கூட்டம் அதிகமாக இருக்கும்.மார்ச், ஏப்., மே மாதத்தின் தனது குஞ்சுகளுடன் திரும்பச் சென்றுவிடும்.

22-ஜன-2025

முக்குளிப்பான், மற்றும் வக்கா, புள்ளி மூக்கு வாத்து, வர்ண நாரை உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் வந்துள்ளன. இன்றைய தேதிக்கு 30ஆயிரத்திற்கும் அதிகமான பறவைகள், தங்கியுள்ளன.

22-ஜன-2025

வருபவர்களுக்கு அனுமதி கட்டணம் உண்டு, கேமராவிற்கு தனிக்கட்டணம். கையோடு பைனாகுலர் கொண்டு வந்தால் பறவைகளை நெருக்கத்தில் பார்த்து ரசிக்கலாம்.

22-ஜன-2025