பாரம்பரிய வெண்ணெய் புட்டு ரெசிபி இதோ

தேவையானப் பொருட்கள்: புழுங்கல் அரிசி - 1 கப், வெல்லம் - 1 கப், பால் - 200 மி.லி.,

கடலைப்பருப்பு, தேங்காய் துருவல், ஏலக்காய்த்துாள் - சிறிதளவு, வெண்ணெய், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.

புழுங்கல் அரிசியை ஊற வைத்து, கெட்டி மாவாக அரைக்கவும். கடலைப்பருப்பை தண்ணீரில் வேக வைக்கவும்.

வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சவும்.

அதில் பால் ஊற்றி கொதித்ததும் அரைத்த மாவை சேர்த்து கிளறவும்.

பின், வேகவைத்த கடலைப்பருப்பு, உப்பு, தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய்த்துாள் துாவி கிளறி இறக்கவும்.

பெரிய தட்டில் வெண்ணெய் தடவி, கலவையை ஊற்றி ஆறியதும் துண்டுகளாக்கினால், இப்போது பாரம்பரிய சுவையான 'வெண்ணெய் புட்டு' ரெடி.