ஒன்பது மணி நேரம் தூங்கினால் என்ன பலன்கள் கிடைக்கும்?

13-ஆக்-2025

துாங்க ஆரம்பித்த முதல் 90 நிமிடங்கள் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்வோம். அதன்பின் சில மைக்ரோ வினாடிகள், அதாவது, 1 வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரம் விழிப்பு வரும்.

13-ஆக்-2025

அந்த நேரத்தில் ஆழ்ந்த சுவாசம், திரும்பி படுப்பது போன்ற செயல்கள் நடப்பது வழக்கம்.

13-ஆக்-2025

இதற்கு பின், அடுத்த 10 - 20 நிமிடங்கள் மிதமான உறக்கம், அதன் பின், சில மைக்ரோ வினாடிகள் மீண்டும் விழிப்பு வரும்.

13-ஆக்-2025

அடுத்த 60 நிமிடங்கள் ஆழ்ந்த உறக்கம் இருக்கும். ஆழ்ந்த உறக்கம், விழிப்பு, மிதமான உறக்கம் என்ற இந்த சுழற்சியாக இருக்கும்.

13-ஆக்-2025

துாக்கத்தின் ஆரம்பத்தில் ஆழ்ந்த உறக்கம் அதிக நேரமும், காலையில் விழிப்பதற்கு முன் மிதமான உறக்கம் நீண்ட நேரமும் இருக்கும்.

13-ஆக்-2025

அதிகாலையில் வரும் கனவுகள் பெரும்பாலும் நினைவில் இருப்பதற்கு, அந்த நேரத்தில் நாம் மிதமான உறக்கத்தில் இருப்பது தான் காரணம்.

13-ஆக்-2025

தினமும் இரவில் உறங்கும் போது, ஆழ்ந்த துாக்கம், விழிப்பு, மிதமான துாக்க சுழற்சி ஏழு முறை இயல்பாக நடக்க வேண்டும்.

13-ஆக்-2025

இதற்கு ஒன்பது மணி நேர துாக்கம் அவசியம். இது உடல் புத்துணர்ச்சி அடையவும், மன அழுத்தம் குறையவும், கவனம் மற்றும் உற்பத்தித் திறன் அதிகரிக்கவும் உதவும்

13-ஆக்-2025

மேலும், நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, இதய நோய் மற்றும் நீரிழிவு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க செய்யும்.

13-ஆக்-2025