ரயில் பயணத்தில் 45 காசு காப்பீடு பயன் தருமா?

12-ஆக்-2025

ஆன்லைனில் ரயில் டிக்கெட்டுக்கு முன்பதிவு செய்யும்போது, 45 பைசா பிரீமியம் பிடித்துக் கொள்ளலாமா? என கேட்கப்படும்.

12-ஆக்-2025

இது, 'ஆப்ஷனல் பயண காப்பீடு திட்டமாகும். ஆம் என பதிலளித்தால், உங்கள் டிக்கெட் கட்டணத்தோடு இந்த தொகையும் பிடித்தம் செய்யப்படும்.

12-ஆக்-2025

பாலிசி விபரங்கள் இ - மெயில், குறுஞ்செய்தியாக வரக்கூடும். அதில் வழங்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி, நாமினி குறித்த விபரத்தையும் பதிவு செய்ய வேண்டும்.

12-ஆக்-2025

இந்தக் காப்பீடு, அந்த ஒரு பயணத்துக்கு மட்டுமே பொருந்தும்; பயணத்தை ரத்து செய்தால் பிரீமியம் திரும்ப வழங்கப்படாது.

12-ஆக்-2025

ரயில் பயணத்தின் போது ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், உயிரிழப்புக்கு ரூ.10 லட்சம், நிரந்தர முழுமையான ஊனத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்.

12-ஆக்-2025

நிரந்தர பகுதியளவு ஊனத்துக்கு ரூ.7.5 லட்சம், மருத்துவமனை செலவுக்கு ரூ.2 லட்சம், சடலத்தை எடுத்துச் செல்லும் செலவுக்கு ரூ. 10,000 வரை இழப்பீடு வழங்கப்படும்.

12-ஆக்-2025

கடந்த 5 ஆண்டுகளில் இந்தக் காப்பீட்டின் கீழ், 333 கோரிக்கைகளுக்கு ரூ.27.22 கோடி இழப்பீடு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

12-ஆக்-2025

45 பைசா செலவில் இவ்வளவு பெரிய காப்பீடு பாதுகாப்பு கிடைப்பது வரவேற்கத்தக்கதாகும்.

12-ஆக்-2025