Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/அவியல்/வா வாசி யோசி...

வா வாசி யோசி...

வா வாசி யோசி...


PUBLISHED ON : ஜன 04, 2026

Follow on Google

PUBLISHED ON : ஜன 04, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'உங்களின் வாழ்க்கை மீது தாக்கம் செலுத்துவது யார்... எது?' என்ற கேள்விக்கு, சென்னை பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் சொன்னவை இவை!

'இவர்கள் தேசத்தின் தேவைகள்' என்பதை உணர்த்துகின்றன இப்பதில்கள்...

* 'என்னை வழிநடத்தும் சக்தி கவிதைகளுக்கு உண்டு; 'இதுவரை மலர்ந்து இருந்ததற்கான எந்த தற்பெருமையும் உதிர்ந்த பூவிடம் இல்லை; அது அப்படியே இருந்தது, ஒரு விடையை சரியாக எழுதிவிட்டது போல!' - கடமை செய்ததற்கு பாராட்டு எதிர்பார்க்கக் கூடாதென எனக்கு உணர்த்தியது கல்யாண்ஜியின் இக்கவிதை!'

- இ.இசக்கியம்மாள்.

*'படித்தது கட்டடக்கலை என்றாலும், நுாறாண்டுகளாக வழக்கத்தில் இல்லாத யாழ், குடமுழா இசைக்கருவிகள் பற்றி ஆராய்ந்து அதை மீண்டும் உருவாக்கி, இதற்காக 'உரு' எனும் நிறுவனத்தை துவக்கிய தருண் சேகர் என் குரு; 'விருப்பமுள்ளதை தேடினால் 100 சதவீதம் வெற்றி கிடைக்கும்' என்பதை எனக்கு உணர்த்தியவர்!'

- வே.ஐஸ்வர்யா.

* 'பெற்றோர் பிரிவால் விடுதியில் தங்கி பள்ளிக்கல்வி முடித்தவர் என் பேராசிரியர் குறளரசன்; உதவித்தொகையில் உயர்கல்வி, குற்றவியல் துறையில் முனைவர் பட்டம்; இன்று, உலகப் புகழ்பெற்ற பெல்ஜியம் கென்ட் பல்கலையில் அவர் பேராசிரியர்; தன் துயரங்களை நினைத்தே காலம் கடத்த வாய்ப்பிருந்தும் அதை தவிர்த்து சாதித்த உண்மையான பலசாலி!'

- ரா.நந்தகுமார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap