Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/சுவாச மண்டலத்தை பாதுகாக்கும் கஷாயம்!

சுவாச மண்டலத்தை பாதுகாக்கும் கஷாயம்!

சுவாச மண்டலத்தை பாதுகாக்கும் கஷாயம்!


PUBLISHED ON : ஆக 10, 2025

Follow on Google

PUBLISHED ON : ஆக 10, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சளி, இருமல், மூக்கில் தொடர்ந்து நீர் ஒழுகுவது போன்ற தொந்தரவுகளால் அடிக்கடி பாதிக்கப்படுபவர்கள், வீட்டிலேயே கஷாயம் தயார் செய்து குடிக்கலாம்.

ஒரு டம்ளர் நீரில் கால் டீ ஸ்பூன் மஞ்சள் துாள், கால் டீ ஸ்பூன் மிளகு துாள், ஒரு ஏலக்காய், ஒரு லவங்கம் எடுத்து நன்றாக இடித்து, ஒரு டம்ளர் நீரில் போட்டு, ஒரு கைப்பிடி அளவு துளசி இலை, இல்லாவிட்டால் கற்பூரவல்லி இலை சேர்க்கலாம். இரண்டும் இருந்தால் ஒரு கைப்பிடி அளவு சேர்த்துக் கொள்ளலாம்.

இதை 3 நிமிடம் கொதிக்க வைத்து, வடிகட்டி, சிறிதளவு நாட்டு சர்க்கரை கலந்து, பெரியவர்கள் 40 மில்லி, குழந்தைகள் 20 மில்லி குடிக்கலாம்.

இதை தினசரி எடுத்துக் கொண்டால், தொற்று பாதிப்பு இல்லாமல், சளி தொந்தவு வராமல் தடுக்க முடியும்.

காரணம், சுவாச மண்டலத்தை பாதுகாப்பதில் இது மிகப் பெரிய பங்காற்றுகிறது. சளி, இருமல் இருக்கும் நாட்களில் இந்த கஷாயத்தை, உணவு சாப்பிட்ட பின் மூன்று வேளையும் ஐந்து நாட்கள் குடிக்கலாம். இதனால், உடலில் தங்கியுள்ள கபம், மலம் மற்றும் வியர்வை வழியாக வெளியேறி விடும்.

டாக்டர் யோ.தீபா, இயற்கை மற்றும் யோகா மருத்துவர், அரசு யோகா, இயற்கை மருத்துவமனை,சென்னை 044 - 2622 2682sakshaayaan@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap