sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

பைரவர் - குறிப்புகள்

/

பைரவர் - குறிப்புகள்

பைரவர் - குறிப்புகள்

பைரவர் - குறிப்புகள்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பைரவருக்கு பிடித்தமானது சந்தனக்காப்பு. இதில் புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்துாரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சை கற்பூரத்தை சேர்ப்பர்.

* காலையில் பைரவரை வழிபட்டால் நோய் நீங்கும். மதியம் வழிபட்டால் விருப்பம் நிறைவேறும். மாலையில் வழிபட்டால் பாவம் தீரும். இரவில் வழிபட்டால் வாழ்வு வளம் பெறும்.

* பைரவருக்கு சிவப்புத் துணியில் 9 மிளகை ஒரு முடிச்சிட்டு நல்லெண்ணெய் விட்டு தீபமேற்ற செல்வம் பெருகும்.

* தாமரை, வில்வம், தும்பை, சந்தன மாலைகளை பைரவருக்கு அணிவிப்பது சிறப்பு. செவ்வரளி, மஞ்சள், செவ்வந்தி, வாசனை மலர்களால் அர்ச்சனை செய்வது சிறப்பு. மல்லிகையைத் தவிர்க்க வேண்டும்.

* சர்க்கரைப் பொங்கல், தயிர்ச்சாதம், தேன், செவ்வாழை, அவல் பாயசம், உளுந்து வடை, சம்பா அரிசி சாதம், பால், பழவகைகள் வைத்து வழிபடுவது சிறப்பு. .

* செல்வத்திற்கு அதிபதியாக விளங்குபவர் சொர்ண ஆகர்ஷண பைரவர் என்பர். இவரது இடது கையில் அட்சய பாத்திரம் இருக்கும்.

* காசியின் காவல் தெய்வமான பைரவருக்கு பூஜை செய்த பிறகே காசி விஸ்வநாதருக்கு வழிபாடு தொடங்கும்.

* காசிக்கு செல்பவர்கள் கங்கையில் நீராடி விஸ்வநாதரை வழிபட்டு இறுதியாக காலபைரவரை தரிசித்தால் தான் யாத்திரைக்கான முழுபலன் கிடைக்கும்.

* 'அமர்தகர்' என்றும், 'பாப பக்ஷணர்' என்றும் பைரவர் அழைக்கப்படுகிறார். 'அமர்தகர்' என்பதற்கு ஆணவத்தை அழிப்பவர் என்றும், 'பாப பக்ஷணர்' என்றால் அறியாமையால் செய்த பாவங்களைப் போக்குவர் என்றும் பொருள்.

* தேய்பிறை அஷ்டமியன்று பைரவ விரதத்தை மேற்கொள்ள வேண்டும். அன்று செவ்வாயாக இருந்தால் மிகவும் நல்லது. தொடர்ந்து 21 தேய்பிறை அஷ்டமியன்று விரதம் இருந்தால் விருப்பம் நிறைவேறும்.

* காலபைரவருக்கு எட்டு கோயில்கள் காசியில் உள்ளதால் இத்தலத்தை பைரவ ேக்ஷத்திரம் என்பர்.

* குத்தாலம் - மயிலாடுதுறை சாலையில் உள்ள ேக்ஷத்திரபாலபுரத்தில் காலபைரவர் மூலவராக இருக்கிறார்.

* நாகபட்டினம் மாவட்டம் சீர்காழியில் சட்டைநாதரை தலைவராகக் கொண்டு அஷ்ட பைரவர் சன்னதி உள்ளது.

* திருச்சி - உறையூர் சாலையில் உள்ள ஜெயகாளிகாம்பாள் கோயிலில் அஷ்ட பைரவர்கள், தங்களுக்குரிய சக்திகளான பைரவிகள், வாகனங்களுடன் காட்சியளிக்கின்றனர்.

* கோயம்புத்துார் நஞ்சுண்டாபுரத்தில் எட்டடி உயர கால பைரவர் இருக்கிறார்.

* காஞ்சிபுரம் அருகிலுள்ள திருமாகறல் என்னும் ஊரில் அர்த்தநாரி கோலத்தில் பைரவர் உள்ளார்.

* கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள ஆறகளுர் பெரியநாயகி - காமநாதீசுவரர் கோயிலில் அஷ்ட பைரவர் சன்னதி உள்ளது.

* திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகிலுள்ள காரைக்காடு கிராமத்தில் உள்ள பைரவசாய் பீடத்தில் நவபைரவர் என ஒன்பது பைரவர்கள் உள்ளனர்.




    • Dinamalar Events


    Dinamalar