sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஜூலை 26, 2024 10:17 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 10:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

க.கைலாசம், உத்திரமேரூர், காஞ்சிபுரம்.

*தங்க மெட்டியை அணியலாமா?

தங்கம் மகாலட்சுமியின் அம்சம். அதை நம் காலில் அணிவது தவறல்லவா...

தி.அம்பலவாணன், சிதம்பரம், கடலுார்.

*நேருக்கு நேர் நின்று சுவாமியை தரிசிக்கலாமா...

சுவாமியின் கடைக்கண் பார்வை அருள் நிறைந்தது. எனவே பக்கவாட்டில் நின்று தரிசியுங்கள்.

ச.அர்ஜூன், கால்காஜி, டில்லி.

*வீட்டில் எலுமிச்சை தீபம் ஏற்றலாமா?

துர்கைக்கு எலுமிச்சை தீபம், பைரவருக்கு மிளகு தீபத்தை கோயிலில் மட்டும் ஏற்ற வேண்டும்.

வே.முருகன், உத்தமபாளையம், தேனி.

*வீட்டில் இருக்க வேண்டிய படங்கள் என்ன?

குலதெய்வம், இஷ்ட தெய்வம் அவசியம். மற்றவை உங்கள் விருப்பம்.

க.திவ்யபாரதி, முத்தலாப்பேட்டை, புதுச்சேரி.

*கடவுளுக்கு பழைய சாதம் படைக்கலாமா?

படைக்கக் கூடாது. அதைச் சாப்பிடும் முன் கடவுளை வணங்குங்கள்.

கு.பொன்னர்சங்கர், சிங்காநல்லுார், கோயம்புத்துார்.

*காய்ச்சிய எண்ணெய்யை விளக்கிற்கு பயன்படுத்தலாமா?

சுவாமி சம்பந்தப்பட்ட எதற்கும் காய்ச்சிய எண்ணெய்யை பயன்படுத்தக் கூடாது.

மு.பார்வதி, வாசுதேவநல்லுார், தென்காசி.

*கூரைப்புடவை, கோடிப்புடவை இரண்டும் ஒன்றா?

தாலி கட்டும் போது உடுத்துவது கூரைப்புடவை. புதிதாக உடுத்துவது கோடிப்புடவை.

கு.கதிரேசன், கப்பலுார், மதுரை.

*உடனடி பலனுக்கு மந்திரத்தை ஜபிக்கலாமா, எழுதலாமா...

உடனடி பலனுக்கு மந்திரத்தை மனதிற்குள் ஜபியுங்கள். ஜபித்தபடி எழுதினால் சிறப்பு.

ந.சியாமளா, திங்கள்சந்தை, கன்னியாகுமரி.

*கோதுாளி என்றால்...

மேய்ச்சல் முடிந்து பசு வரும் போது அதன் கால்பட்ட மண்ணில் இருந்து கிளம்பும் புழுதி கோதுாளி.

ப.பிரவீணா, சிவாஜிநகர், பெங்களூரு.

*பிறந்தநாள், நினைவுநாள் எதைக் கொண்டாட வேண்டும்?

பிறந்த நாளில் கொண்டாட்டம், நினைவு நாளில் வழிபாடு, அன்னதானம் செய்வது நல்லது.






      Dinamalar
      Follow us