
க.கைலாசம், உத்திரமேரூர், காஞ்சிபுரம்.
*தங்க மெட்டியை அணியலாமா?
தங்கம் மகாலட்சுமியின் அம்சம். அதை நம் காலில் அணிவது தவறல்லவா...
தி.அம்பலவாணன், சிதம்பரம், கடலுார்.
*நேருக்கு நேர் நின்று சுவாமியை தரிசிக்கலாமா...
சுவாமியின் கடைக்கண் பார்வை அருள் நிறைந்தது. எனவே பக்கவாட்டில் நின்று தரிசியுங்கள்.
ச.அர்ஜூன், கால்காஜி, டில்லி.
*வீட்டில் எலுமிச்சை தீபம் ஏற்றலாமா?
துர்கைக்கு எலுமிச்சை தீபம், பைரவருக்கு மிளகு தீபத்தை கோயிலில் மட்டும் ஏற்ற வேண்டும்.
வே.முருகன், உத்தமபாளையம், தேனி.
*வீட்டில் இருக்க வேண்டிய படங்கள் என்ன?
குலதெய்வம், இஷ்ட தெய்வம் அவசியம். மற்றவை உங்கள் விருப்பம்.
க.திவ்யபாரதி, முத்தலாப்பேட்டை, புதுச்சேரி.
*கடவுளுக்கு பழைய சாதம் படைக்கலாமா?
படைக்கக் கூடாது. அதைச் சாப்பிடும் முன் கடவுளை வணங்குங்கள்.
கு.பொன்னர்சங்கர், சிங்காநல்லுார், கோயம்புத்துார்.
*காய்ச்சிய எண்ணெய்யை விளக்கிற்கு பயன்படுத்தலாமா?
சுவாமி சம்பந்தப்பட்ட எதற்கும் காய்ச்சிய எண்ணெய்யை பயன்படுத்தக் கூடாது.
மு.பார்வதி, வாசுதேவநல்லுார், தென்காசி.
*கூரைப்புடவை, கோடிப்புடவை இரண்டும் ஒன்றா?
தாலி கட்டும் போது உடுத்துவது கூரைப்புடவை. புதிதாக உடுத்துவது கோடிப்புடவை.
கு.கதிரேசன், கப்பலுார், மதுரை.
*உடனடி பலனுக்கு மந்திரத்தை ஜபிக்கலாமா, எழுதலாமா...
உடனடி பலனுக்கு மந்திரத்தை மனதிற்குள் ஜபியுங்கள். ஜபித்தபடி எழுதினால் சிறப்பு.
ந.சியாமளா, திங்கள்சந்தை, கன்னியாகுமரி.
*கோதுாளி என்றால்...
மேய்ச்சல் முடிந்து பசு வரும் போது அதன் கால்பட்ட மண்ணில் இருந்து கிளம்பும் புழுதி கோதுாளி.
ப.பிரவீணா, சிவாஜிநகர், பெங்களூரு.
*பிறந்தநாள், நினைவுநாள் எதைக் கொண்டாட வேண்டும்?
பிறந்த நாளில் கொண்டாட்டம், நினைவு நாளில் வழிபாடு, அன்னதானம் செய்வது நல்லது.