ADDED : ஜூலை 26, 2024 10:29 AM

* விநாயகர் மீது கச்சியப்ப முனிவர் பாடிய 'காரியசித்தி மாலையை' தொடர்ந்து படித்தால் வெற்றி கிடைக்கும்.
* மலை மீதுள்ள முருகன் சன்னதிக்கு சக்தி அதிகம்.
* மாலையில் விளக்கேற்றி அபிராமி அந்தாதியை தொடர்ந்து 21 நாள் படித்தால் நினைத்தது நிறைவேறும்.
* ஆதிசங்கரர் பாடிய கனகதாரா ஸ்தோத்திரத்தை படித்தால் பணப்பிரச்னை வராது.
* நம்மாழ்வார் மீது பாசுரம் பாடி வைகுண்டத்தை அடைந்தவர் மதுரகவியாழ்வார்.
* ஒப்பிலியப்பன் கோயிலில் உப்பு சேர்க்காமல் சுவாமிக்கு நைவேத்தியம் செய்கின்றனர்.
* வல்லாரைக் கீரைக்கு 'சரஸ்வதி பச்சிலை' என பெயர்.
* கோபுரத்தை பார்த்து வணங்கினாலும், கடவுளின் பெயர்களைச் சொன்னாலும் புண்ணியம் உண்டு.
* கோயிலுக்குள் ஓடுதல், சிரித்தல், அதிர்ந்து நடத்தல், கோபப்படுதல், தற்பெருமை பேசுதல், கிண்டல் செய்தல் கூடாது. ஏனெனில் அங்கு இருக்கும் தர்மதேவதையின் தண்டனைக்கு ஆளாவர்.
* நல்ல புத்தகங்களை பிறருக்கு கொடு. கல்விக்கு உதவி செய்த பலன் கிடைக்கும்.