sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஆக 02, 2024 01:11 PM

Google News

ADDED : ஆக 02, 2024 01:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரா.பர்வதவர்த்தினி, சின்னமனுார், தேனி.

*தாலி பாக்கியத்திற்கு....

பெண் தெய்வத்தை குலதெய்வமாக கொண்டவர்கள் அந்த அம்மனையே வழிபடுங்கள். மற்றவர்கள் மதுரை மீனாட்சி அம்மனை வழிபடுங்கள்.

பி.தேவி, அடகூர், மைசூரு.

*வாம பாகம் என்றால் என்ன?

சிவனின் இடதுபாகம் வாமபாகம். பார்வதி தவம் இருந்து அவரின் இடது பாகத்தை அடைந்தாள். இதையே 'அர்த்தநாரீஸ்வரர்' என்கிறோம்.

சி.திருநாவுக்கரசு, நெய்வேலி, கடலுார்.

*காப்புத்தடை என்றால்...

அம்மனுக்கு காப்பு கட்டும் போது ஊரில் இருப்பவர்கள் திருவிழா முடியும் வரை வெளியே செல்லக் கூடாது. இதுவே காப்புத்தடை.

இ.ஸ்ரேயா, நங்கநல்லுார், சென்னை.

*துர்கைக்கு வேறு பெயர் உண்டா...

உண்டு. அவை கொற்றவை, காடுகிழாள், காளி

ப.காளமேகம், ஊட்டி, நீலகிரி.

*சிங்கத்தின் மீது அம்மன் வலம் வருவது ஏன்?

தீயசக்தியை அழிக்க சிங்கத்தின் மீது அம்மன் கோபத்துடன் வலம் வருகிறாள்.

சி.ரிஷி, கயத்தாறு, துாத்துக்குடி.

*கருமாரி, அருள்மாரி என அம்மனை அழைக்கிறோமே...

அசுரன் மாரனை அழித்து மழையை தந்தவள் மாரி. கருணைமழை பொழிவதால் கருமாரி. அருள்மழை பொழிவதால் அருள்மாரி.

கு.ரம்யா, கரோல்பாக், டில்லி.

*அம்மனின் மாதமாக ஆடியை அழைப்பது ஏன்?

சுவாமிக்கு உரியது உத்ராயணம், (தை - ஆனி), அம்மனுக்கு உரியது தட்சிணாயணம் (ஆடி - மார்கழி). அதனால் முதல் மாதத்தை கொண்டாடுகிறோம்.

சா.பாரி, முதுகுளத்துார், ராமநாதபுரம்.

*சக்தி உபாசகர் என்பது ஏன்?

அம்பிகையின் மூலமந்திரங்களை ஜபிப்பவர்கள், ஸ்ரீசக்கர பூஜை செய்பவர்கள் சக்தி உபாசகர்கள்.

பி.பிரகதி, நாகர்கோவில், கன்னியாகுமரி.

*லலிதா சகஸ்ரநாமம் எந்த நுாலில் உள்ளது?

மார்க்கண்டேய புராணத்தில் உள்ளது. பண்டாசுரனை அழிக்க தேவர்கள் யாகம் நடத்திய போது, அம்பிகை காட்சியளித்தாள். அப்போது தேவர்கள் துதித்த ஆயிரம் திருநாமங்களே லலிதா சகஸ்ரநாமம்.






      Dinamalar
      Follow us