
ரா.பர்வதவர்த்தினி, சின்னமனுார், தேனி.
*தாலி பாக்கியத்திற்கு....
பெண் தெய்வத்தை குலதெய்வமாக கொண்டவர்கள் அந்த அம்மனையே வழிபடுங்கள். மற்றவர்கள் மதுரை மீனாட்சி அம்மனை வழிபடுங்கள்.
பி.தேவி, அடகூர், மைசூரு.
*வாம பாகம் என்றால் என்ன?
சிவனின் இடதுபாகம் வாமபாகம். பார்வதி தவம் இருந்து அவரின் இடது பாகத்தை அடைந்தாள். இதையே 'அர்த்தநாரீஸ்வரர்' என்கிறோம்.
சி.திருநாவுக்கரசு, நெய்வேலி, கடலுார்.
*காப்புத்தடை என்றால்...
அம்மனுக்கு காப்பு கட்டும் போது ஊரில் இருப்பவர்கள் திருவிழா முடியும் வரை வெளியே செல்லக் கூடாது. இதுவே காப்புத்தடை.
இ.ஸ்ரேயா, நங்கநல்லுார், சென்னை.
*துர்கைக்கு வேறு பெயர் உண்டா...
உண்டு. அவை கொற்றவை, காடுகிழாள், காளி
ப.காளமேகம், ஊட்டி, நீலகிரி.
*சிங்கத்தின் மீது அம்மன் வலம் வருவது ஏன்?
தீயசக்தியை அழிக்க சிங்கத்தின் மீது அம்மன் கோபத்துடன் வலம் வருகிறாள்.
சி.ரிஷி, கயத்தாறு, துாத்துக்குடி.
*கருமாரி, அருள்மாரி என அம்மனை அழைக்கிறோமே...
அசுரன் மாரனை அழித்து மழையை தந்தவள் மாரி. கருணைமழை பொழிவதால் கருமாரி. அருள்மழை பொழிவதால் அருள்மாரி.
கு.ரம்யா, கரோல்பாக், டில்லி.
*அம்மனின் மாதமாக ஆடியை அழைப்பது ஏன்?
சுவாமிக்கு உரியது உத்ராயணம், (தை - ஆனி), அம்மனுக்கு உரியது தட்சிணாயணம் (ஆடி - மார்கழி). அதனால் முதல் மாதத்தை கொண்டாடுகிறோம்.
சா.பாரி, முதுகுளத்துார், ராமநாதபுரம்.
*சக்தி உபாசகர் என்பது ஏன்?
அம்பிகையின் மூலமந்திரங்களை ஜபிப்பவர்கள், ஸ்ரீசக்கர பூஜை செய்பவர்கள் சக்தி உபாசகர்கள்.
பி.பிரகதி, நாகர்கோவில், கன்னியாகுமரி.
*லலிதா சகஸ்ரநாமம் எந்த நுாலில் உள்ளது?
மார்க்கண்டேய புராணத்தில் உள்ளது. பண்டாசுரனை அழிக்க தேவர்கள் யாகம் நடத்திய போது, அம்பிகை காட்சியளித்தாள். அப்போது தேவர்கள் துதித்த ஆயிரம் திருநாமங்களே லலிதா சகஸ்ரநாமம்.