sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : மே 01, 2025 01:49 PM

Google News

ADDED : மே 01, 2025 01:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 கு.துவாரகேஷ், அவிநாசி, கோயம்புத்துார்: பயம் தீர...

சர்வ ஸ்வரூபே சர்வேசி சர்வ சக்தி சமன்விதே!

பயேப்ய ஸ்த்ராஹினோ தேவி துர்க்கே தேவி நமோஸ்துதே!!

இதை தினமும் சொல்லி துர்கையை வழிபடுங்கள்.

ஆர்.ஆனந்த், எட்டையபுரம், துாத்துக்குடி: இதயக்கோயில் எங்குள்ளது?

சிவபக்தரான பூசலார் இக்கோயிலை திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் கட்டினார். சுவாமியின் பெயர் இருதயாலீஸ்வரர்.

வி.மாரி, நத்தம், திண்டுக்கல்: சித்தர்கள் கோயில்களை தரிசித்தால்...

அறியாமை அகலும்; மனஅமைதி கிடைக்கும்.

டி.காவ்யா, இருக்கன்குடி, விருதுநகர்: முன்னோர் கட்டிய கோயிலை பராமரிக்காவிட்டால்...

பாவம் சேரும். முன்னோர் கொடுத்ததே இந்த வாழ்க்கை. அவர்கள் கட்டிய கோயிலை பராமரிப்பது உங்களின் கடமை.

மு.அமராவதி, வடிவீஸ்வரம், கன்னியாகுமரி: உக்கிர தெய்வத்தை வழிபடலாமா...

கோயிலில் வழிபடலாம். வீட்டில் வேண்டாம்.

பே.புஷ்பராணி, ஸ்ரீமுஷ்ணம், கடலுார்: கிராம தெய்வத்திற்கு எத்தனை நாள் திருவிழா நடத்தலாம்?

ஒற்றைப்படை எண்ணில் (1, 3, 5, 7...) இருப்பது அவசியம்.

ரா.பூரணி, ஆவடி, திருவள்ளுர்: தாயார் செய்ய வேண்டிய நேர்ச்சையை மகன் நிறைவேற்றலாமா?

நிறைவேற்றலாம். தாயின் ஆசியும், கடவுளின் அருளும் கிடைக்கும்.

கா.ராஜேஸ்வரி, பசவன்குடி, பெங்களூரு: எருக்கம்பூவை சிவனுக்கு சாத்தலாமா...

சாத்துவது விசேஷம். சிவனுக்குரிய பூக்களில் இதுவும் ஒன்று.

யு.ஆர்த்தி, ஏரோசிட்டி, டில்லி: காணிக்கையை மற்றவர் மூலம் கோயிலுக்கு கொடுத்து அனுப்பலாமா?

தவிர்க்க முடியாத சூழலில் மற்றவர் மூலம் கொடுத்தனுப்பலாம்.






      Dinamalar