நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பசுஞ்சாண உருண்டைகளை காய வைத்து நெருப்பில் புடமிட்டால் கிடைக்கும் சாம்பல் 'திருநீறு'. ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பு அன்றும், பவுர்ணமியன்றும் இதை தயாரிப்பது விசேஷம்.
* கோயிலில் தரும் தீர்த்தம், விபூதி, குங்குமம், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றில் திருநீறுக்கே முதலிடம்.
* சாப்பிடும் முன்பும், துாங்கும் முன்பும், குளித்த பிறகும் திருநீறு அணிவது அவசியம்.
* பித்தளை, வெண்கலத்தால் ஆன கொப்பரை, சம்புடம், பட்டால் ஆன துணிப்பையில் திருநீறை வைப்பது நல்லது.
* யாருக்காவது உடல்நலக்குறைவு ஏற்பட்டால் குலதெய்வத்தை வேண்டி பெரியவர்கள் திருநீறு பூசிவிடுவர்.