ADDED : ஆக 05, 2016 09:34 AM

முக்கிய பெருமாள் கோவில்களில், கருடனுக்கு தனி சன்னிதி உள்ளது.
* ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மிக உயரமான கருடன் சன்னிதி உள்ளது. இவருக்கு கட்டப்படும் வஸ்திரம் மிகப்பெரியது. இங்குள்ள கருட மண்டபத்தில் 212 தூண்கள் உள்ளன.
* கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் நறையூர் நம்பி கோவிலில் அமைந்துள்ள கல் கருடன்.
* சென்னை சவுகார்பேட்டை பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவிலில் பெண் வடிவில் கருடன் அருள்பாலிக்கிறார்.
* திருவள்ளூர் மாவட்டம் கோயில்பதாகை சுந்தரராஜப் பெருமாள் கோவிலில் தவம் செய்யும் நிலையில் கருடன் இருக்கிறார். இது தவிர நின்ற நிலையிலும் ஒரு கருடாழ்வார் கருவறையின் பின்பக்கம் உள்ளார்.
* மயிலாடுதுறை அருகிலுள்ள தேரழுந்தூர் தேவாதிராஜன் கோவிலில் மூலவர் தேவராஜன் கருட விமானத்தின் கீழிருந்தவாறு அருள்பாலிக்கிறார். இந்தக் கருடவிமானம் தேரழுந்தூர் ஆமருவியப்பனுக்கு கருடனால் வழங்கப்பட்டதாகும்.
* மைசூரு அருகே அமைந்துள்ள மேல்கோட்டை என்ற திருநாராயணபுரத்தில் உள்ள பெருமாளுக்கு அணிவிக்கப்படும் வைரமுடி கருடனால் வழங்கப்பட்டது என்பர்.

