* நன்மையும் தீமையும் சமமாகாது. நன்மையைக் கொண்டு தீமையைத் தடுப்பீராக. இதனால் பகைவர்கூட நண்பராக மாறுவதைக் காண்பீர்.
* எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக இறைவன் சிரமப்படுத்துவதில்லை. சிரமத்திற்குப் பின்னர் இலகுவை அவன் உண்டாக்குவான்.
* தனிமனிதனின் தவறான செயலுக்காக அவன் அனைவரையும் தண்டிப்பதில்லை. ஆனால் தீமைகளை தடுக்கும் ஆற்றல் பெற்றிருந்தும் அதை தடுக்காதவர் மீது தண்டிப்பான்.
* எந்தப் பொருளில் மானக்கேடான தன்மை உள்ளதோ அது அதை பாழ்படுத்துகிறது. இதுவே அதில் நாணம் இருந்தால் அதை ஒளிரச் செய்கிறது.
* தண்டிக்கும் சக்தி பெற்ற நிலையிலும் மன்னிப்பவரே கண்ணியத்திற்குரியவர்.
* உறவை முறித்துக் கொள்பவர்களுடன் உறவைத் தொடர்தல், ஏமாற்றுபவர்களுக்கு உதவுதல், அநீதி இழைப்பவர்களை மன்னித்தல் ஆகியவையே இவ்வுலகிலும், மறுஉலகிலும் உள்ள மனிதர்களின் சிறந்த பண்புகள்.
* உங்கள் நெறியில் அநியாயமாக எதையும் மிகைப்படுத்தாதீர்கள்.