‛‛உன்னை காதலிக்காமல் இருக்க முடியுமா?'': திரிஷா புகைப்படத்திற்கு குஷ்பு அளித்த கமெண்ட்
நடிகை திரிஷாவும், நடிகை குஷ்புவும் தமிழ் திரையுலகில் நீண்டகாலமாக நல்ல நட்புறவில் உள்ளவர்கள். இருவரும் பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர். சமீபகாலமாக திரிஷா பற்றி பரவிய சர்ச்சைகள், அவதூறுகள், பிரச்னைகள் என அனைத்திற்கும் தவறாமல் குரல் கொடுத்து வருபவர் குஷ்பு. இந்த நிலையில், சென்னையில் நேற்று (ஆக.,15) நடந்த சுதந்திர தின விழாவில் பங்கேற்றார் நடிகை திரிஷா. புடவை அணிந்து முதல்வர் விஜய்க்கு சல்யூட் அடித்த காட்சிகள் வைரலாகின.
அவர் அணிந்திருந்த புடவையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார் திரிஷா. இது ரசிகர்களிடம் லைக்குகளை குவித்து வருகிறது. அத்துடன் அந்த புகைப்படத்திற்கு நடிகை குஷ்பு அளித்த கமெண்டில், ‛‛அடடா... அன்பே, நான் உன் மீது காதல் கொள்ளாமல் இருப்பதற்கு ஒரே ஒரு காரணத்தையாவது சொல்வாயா? உள்ளும் புறமும் மிக மிக அழகானவளே!'' என வர்ணித்து பதிவிட்டுள்ளார். இந்த கமெண்டும் வைரலாகியுள்ளது.