உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜன 09, 2025 12:00 AM

அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
வெளிநாடு வாழ் இந்தியர் தினம்
இந்தியாவின் வளர்ச்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு முக்கியமானது. வெளிநாடு வேலைக்கு செல்லும் இந்தியர்களில் சிலர் காலப்போக்கில் அங்கேயே குடியுரிமை பெறுவது அதிகரிக்கிறது. அவர்களையும் நாம் இணைக்க வேண்டும் என்ற நோக்கில் 2003ல் ஜனவரி 9, வெளிநாடு வாழ் இந்தியர் தினமாக அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அறிவித்தார். காந்தியடிகள் தென் ஆப்ரிக்காவில் இருந்து 1915 ஜன. 9ல் இந்தியாவின் மும்பை வந்து சேர்ந்தார். இத்தினத்தை நினைவுபடுத்தும் விதமாக இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
