sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

பார்சலில் வந்த பாம்பு: பெங்களூரு பெண் அதிர்ச்சி

/

பார்சலில் வந்த பாம்பு: பெங்களூரு பெண் அதிர்ச்சி

பார்சலில் வந்த பாம்பு: பெங்களூரு பெண் அதிர்ச்சி

பார்சலில் வந்த பாம்பு: பெங்களூரு பெண் அதிர்ச்சி

2


ADDED : ஜூன் 19, 2024 11:05 AM

Google News

ADDED : ஜூன் 19, 2024 11:05 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: ஆன்லைனில் எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலர் எனப்படும் விளையாட்டு கருவியை ஆர்டர் செய்த பெண்ணுக்கு பார்சலில் விஷப்பாம்பு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குபவர்களுக்கு, அதிர்ச்சி அளிக்கும் பல நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்து வருகிறது. மொபைல் போன் ஆர்டர் செய்பவர்களுக்கு செங்கல், பழங்கள், சோப்பு டப்பா வந்து அதிர்ச்சி கொடுத்துள்ளன. ஒரு சிலருக்கு ஆர்டர் கொடுத்தும் பொருட்கள் வராமல் இருந்துள்ளது.

அந்த வகையில், பெங்களூருவில் பெண் ஒருவருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் சம்பவம் நடந்துள்ளது. ஷார்ஜாபூர் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் ஆன்லைன் மூலம் விளையாட்டு கருவியை ஆர்டர் செய்துள்ளார். குறிப்பிட்ட நாளில் பார்சல் வந்துள்ளது. ஆர்டர் செய்தது வந்துவிட்டதாக மகிழ்ச்சியில் அந்த பெண் பார்சலை பிரித்து பார்த்தார். அப்போது பாம்பு ஒன்று வெளியே வந்தது. பார்சலில் டேப் ஒட்டப்பட்டு இருந்ததால், பாம்பு முழுமையாக வெளியே வர முடியவில்லை. இந்த பாம்பு அதிக விஷம் கொண்ட வகையைச் சேர்ந்தது. இதனை பிடித்து மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் விடப்பட்டது.

பார்சலில் பாம்பு வந்ததை பார்த்து அந்த பெண் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், பிறகு தைரியத்தை வரவழைத்து கொண்டு, அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் கிண்டல் செய்ய துவங்கினர். இந்த வீடியோ சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனத்தின் கவனத்திற்கும் சென்றது.

இதனையடுத்து அந்த நிறுவனம் ‛எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது; சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ஏற்பட்ட இடைஞ்சலுக்கு வருத்தம் தெரிவிக்கிறோம். இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். தேவையான தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள் எனக்கூறியுள்ளது.






      Dinamalar
      Follow us