ADDED : ஜூலை 22, 2024 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமமூர்த்திநகர்: பெங்களூரு, ராமமூர்த்தி நகர் ஹொய்சாளா நகரில் வசித்தவர் மனோஜ், 22. நேற்று முன்தினம் இரவு, தன் நண்பர் ஆன்டனி, 22, என்பவருடன், சாலையில் நடந்து சென்றார்.
அப்போது எதிரே வந்த மர்ம நபர்கள் சிலர், ஆன்டனியிடம் தகராறு செய்து அவரை தாக்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மனோஜ், ஆன்டனியை காப்பாற்ற முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள், மனோஜை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தலைமறைவாகினர்.
உயிருக்கு போராடிய மனோஜை அப்பகுதி மக்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். கொலை செய்தவர்கள் யார், என்ன காரணம் என்று தெரியவில்லை.
ராமமூர்த்திநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.