எல்லையில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: பாதுகாப்பு படையினர் அதிரடி
எல்லையில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: பாதுகாப்பு படையினர் அதிரடி
UPDATED : ஜூன் 23, 2024 03:07 PM
ADDED : ஜூன் 23, 2024 01:54 PM

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் எல்லையில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்து வருவதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. வடக்கு காஷ்மீரின் உரி செக்டரில் உள்ள கோஹல்லான் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு எல்லையில் சந்தேகத்திற்கிடமான நேற்று(ஜூன் 22) இருவர் நடமாடுவதை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர். அப்போது பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு படையினருக்கு இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.
இந்த சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இரண்டு பயங்கரவாதிகளின் சடலங்கள் எல்லைக்கு அருகில் கிடந்ததால் பாதுகாப்புப் படையினரால் மீட்க முடியவில்லை. உரி செக்டார் பகுதியில் இன்று(ஜூன் 23) ஒரு பயங்கரவாதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மற்றொரு பயங்கரவாதியின் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை பாதுகாப்பு படையினர் முறியடித்துள்ளனர்.