சிறையில் இருந்தே வென்ற சுயேட்சை எம்.பி., இடைக்கால ஜாமின் கோரி மனு
சிறையில் இருந்தே வென்ற சுயேட்சை எம்.பி., இடைக்கால ஜாமின் கோரி மனு
ADDED : ஜூன் 06, 2024 10:42 PM

புதுடில்லி: சிறையில் இருந்தே காஷ்மீரின் பாராமுல்லா லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற அப்துல் ஷேக் ரஷீத் பதவியேற்பு விழா பங்கேற்க அனுமதி கோரி இடைக்கால ஜாமின் மனு தாக்கல் செய்தார்.
ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர் அப்துல் ஷேக் ரஷீத், என்ற இன்ஜினியர் ரஷீத், இவர் பயங்கரவாத அமைப்பிற்கு நிதி திரட்டியதாக 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் காஷ்மீரின் பாராமுல்லா லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு, தன்னை எதிர்த்து போட்டியிட்ட தேசிய மாநாட்டு கட்சியின் ஒமர் அப்துல்லாவை 2 லட்சத்து 4 ஆயிரத்து 528 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் எம்.பி.யாக பதவியேற்க தனக்கு இடைக்கால ஜாமின் வழங்க கோரி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் மனு செய்தார். மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி சந்தர்ஜித்சிங் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி பதில் மனு அளிக்க உத்தரவிட்டார்.