sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கால்வாய்க்குள் கார் பாய்ந்து ஒருவர் பலி

/

கால்வாய்க்குள் கார் பாய்ந்து ஒருவர் பலி

கால்வாய்க்குள் கார் பாய்ந்து ஒருவர் பலி

கால்வாய்க்குள் கார் பாய்ந்து ஒருவர் பலி


ADDED : ஜூலை 31, 2024 01:52 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புராரி:வடக்கு டில்லியில் கால்வாயில் கார் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

வடக்கு டில்லியின் புராரி பகுதியில் ரிங் ரோட்டில் உள்ள மெட்ரோ துாண் அருகே, ஞாயிற்றுக்கிழமை இரவு 11:00 மணி அளவில் ஒரு கார் கால்வாய்க்குள் பாய்ந்தது.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கிழக்கு மாவட்டத்தின் பேரிடர் மேலாண்மைக் குழுவினர், தீயணைப்பு வீரர்கள், நீச்சல் வீரர்கள் அங்கு வந்து தேடுதல் வேட்டையில் இறங்கினர். 20 நிமிடங்களில் கார் விழுந்த இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஷாலிமார் பாக் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் புட்டின் பெயரில் பதிவு செய்யப்பட்ட கார், பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் வெளியே கொண்டு வரப்பட்டது. காரில் சடலம் இல்லை.

நள்ளிரவை எட்டியதால் மீட்புப் பணி ஒத்திவைக்கப்பட்டது. திங்கள்கிழமை காலை மீண்டும் மீட்புப்பணி துவங்கியது. நீச்சல் வீரர்கள் உதவியுடன் நீண்ட தேடுதலுக்குப் பிறகு சாக்கடையில் இருந்து சடலத்தை மீட்டனர்.

அவரது கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.






      Dinamalar
      Follow us