உச்சநீதிமன்றத்திற்கு 3 நீதிபதிகள் பெயர் பரிந்துரை; அவர்கள் யார்? யார்?
உச்சநீதிமன்றத்திற்கு 3 நீதிபதிகள் பெயர் பரிந்துரை; அவர்கள் யார்? யார்?
ADDED : மே 26, 2025 08:53 PM

புதுடில்லி: உச்சநீதிமன்றத்திற்கு 3 நீதிபதிகளை தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
அண்மையில் முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா மற்றும் திரிவேதி ஆகியோர் ஓய்வு பெற்றனர். இதனால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு மூன்று காலியிடங்கள் உருவாகின. தற்போது 31 நீதிபதிகள் கொண்டு உச்ச நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலீஜியம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மூவரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பரிந்துரை செய்துள்ளது.
பரிந்துரை செய்யப்பட்ட நீதிபதிகள் விபரம் பின்வருமாறு:
1. கர்நாடகா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அன்ஜாரியா.
2. கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிஸ்னோய்,
3. மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துர்கர்.
கொலிஜீயத்தின் இந்த பரிந்துரைகள் அங்கீகரிக்கப்பட்டால், உச்சநீதிமன்றம் அதன் முழு அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதிகள் எண்ணிக்கையுடன் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.