ADDED : ஜூன் 22, 2025 09:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முசாபர்நகர்:பச்சிளம் ஆண் குழந்தை குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலம், முசாபர் நகர் மாவட்டம் ஜன்சாத் கிராமத்தில், குப்பைத் தொட்டியில் பச்சிளம் ஆண் குழந்தை உயிருடன் நேற்று கண்டெடுக்கப்பட்டது. பிறந்து சில மணி நேரமே ஆன நிலையில் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட குழந்தையை மீட்ட போலீசார், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ஜன்சாத் போலீசார், குழந்தையை கைவிட்ட பெற்றோர் குறித்து விசாரித்து வருகின்றனர்.