sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காஷ்மீரில் குண்டுவெடிப்பு; நான்கு பேர் பரிதாப பலி

/

காஷ்மீரில் குண்டுவெடிப்பு; நான்கு பேர் பரிதாப பலி

காஷ்மீரில் குண்டுவெடிப்பு; நான்கு பேர் பரிதாப பலி

காஷ்மீரில் குண்டுவெடிப்பு; நான்கு பேர் பரிதாப பலி

2


ADDED : ஜூலை 29, 2024 04:23 PM

Google News

ADDED : ஜூலை 29, 2024 04:23 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பழைய இரும்பு கடையில் குண்டு வெடித்ததில், 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தின் சோபோர் நகரில் பழைய இரும்பு கடையில் குண்டு வெடித்தது. குண்டு வெடிக்கும் போது, சிலர் லாரியில் இருந்து பழைய பொருட்களை கடையில் இறக்கி வைத்து கொண்டு இருந்தனர். நசீர் அகமது (வயது 40), ஆசிம் அஷ்ரப் மிர் (வயது 20), ஆதில் ரஷித் பட் (வயது 23) மற்றும் முகமது அசார் (வயது 20) ஆகிய நான்கு பேர் உயிரிழந்தனர்.

பலியானவர்கள் அனைவரும் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ஷேர் காலனியில் வசித்து வந்துள்ளனர். மேலும் இருவர் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தடயவியல் நிபுணர்கள் குழு ஆய்வு நடத்தியது. குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு உடையவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us