sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அதிகாலை பயணத்தால் விபரீதம்; டிரக் மீது பொலிரோ மோதிய விபத்தில் 9 பேர் பலி

/

அதிகாலை பயணத்தால் விபரீதம்; டிரக் மீது பொலிரோ மோதிய விபத்தில் 9 பேர் பலி

அதிகாலை பயணத்தால் விபரீதம்; டிரக் மீது பொலிரோ மோதிய விபத்தில் 9 பேர் பலி

அதிகாலை பயணத்தால் விபரீதம்; டிரக் மீது பொலிரோ மோதிய விபத்தில் 9 பேர் பலி

1


ADDED : ஜூன் 20, 2025 12:11 PM

Google News

1

ADDED : ஜூன் 20, 2025 12:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா: மேற்கு வங்கம் அருகே அதிகாலையில் டிரக் மீது பொலிரோ ஜீப் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் எல்லையில் உள்ள மேற்கு வங்க மாநிலத்தின் புருலியா மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை கோர விபத்து நிகழ்ந்துள்ளது. ஜார்க்கண்டின் நிம்தி பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, பொலிரோ ஜீப்பில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது, நம்சோல் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், வேகமாக வந்த டிரக் மீது பொலிரோ மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஜீப்பில் பயணித்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து பற்றி விசாரித்து வருகின்றனர்.

தூக்க கலக்கத்தில் சிறு தவறு நிகழ்ந்தாலும் உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதால், இரவு நேரம், அதிகாலை நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது.






      Dinamalar
      Follow us
      Arattai