sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

6 மாநிலங்களில் 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஆபத்து: ராகுல்

/

6 மாநிலங்களில் 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஆபத்து: ராகுல்

6 மாநிலங்களில் 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஆபத்து: ராகுல்

6 மாநிலங்களில் 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஆபத்து: ராகுல்

38


ADDED : மார் 13, 2025 05:33 PM

Google News

38

ADDED : மார் 13, 2025 05:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: '' வினாத்தாள் கசிவு காரணமாக ஆறு மாநிலங்களில் உள்ள குழந்தைகள் 85 லட்சம் பேரின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது,'' என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 6 மாநிலங்களில் 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது. வினாத்தாள் கசிவு என்பது, நமது இளைஞர்களுக்கு பெரும் ஆபத்தான பத்மவியூகமாக மாறி உள்ளது.

வினாத்தாள் கசிவு மூலம், கடினமாக உழைக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை, நிச்சயமற்றதன்மை, அழுத்தம் ஏற்படுவதுடன் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைப்பதை தடுக்கிறது. கடின உழைப்பை விட நேர்மையற்ற செயலே சிறந்தது என்ற தவறான செய்தியை அடுத்த தலைமுறையினரிடம் எடுத்துச் செல்கிறது. இது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

நீட் வினாத்தாள் கசிவு, ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி ஓராண்டு முடியவில்லை. நமது போராட்டத்திற்கு பிறகு, மோடி அரசானது அதற்கு தீர்வு எனக்கூறி ஒரு புதிய சட்டத்தின் பின்னால் ஒளிந்து கொண்டது. ஆனால், சமீபத்திய பல வினாத்தாள் கசிவுகள் அந்தச் சட்டம் தோல்வி அடைந்து விட்டது என்பதை நிரூபித்து உள்ளன.

இந்த தீவிரமான பிரச்னை என்பது தோல்வியை காட்டுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும், அரசுகளும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒருங்கிணைந்து கடுமையான நடவடிக்கையை எடுக்கும் போது மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். இந்தத் தேர்வுகளின் கண்ணியத்தைப் பாதுகாப்பது என்பது நமது குழந்தைகளின் உரிமை. அதை எந்த விலை கொடுத்தாவது பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us