sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வேகம் எடுக்கும் கொரோனா: ஆயிரத்தை கடந்த நோயாளிகள் எண்ணிக்கை!

/

வேகம் எடுக்கும் கொரோனா: ஆயிரத்தை கடந்த நோயாளிகள் எண்ணிக்கை!

வேகம் எடுக்கும் கொரோனா: ஆயிரத்தை கடந்த நோயாளிகள் எண்ணிக்கை!

வேகம் எடுக்கும் கொரோனா: ஆயிரத்தை கடந்த நோயாளிகள் எண்ணிக்கை!

12


UPDATED : மே 26, 2025 04:48 PM

ADDED : மே 26, 2025 02:58 PM

Google News

12

UPDATED : மே 26, 2025 04:48 PM ADDED : மே 26, 2025 02:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1000த்தை கடந்துள்ளது. கேரளா, டில்லி, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கொரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா அறிகுறிகளுடன் பலர் இருப்பது மருத்துவ பரிசோதனைகளில் தெரிய வந்தது. பல்வேறு மாநிலங்களில் இந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது. நேற்று வரை 257 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது.

இந் நிலையில், தற்போது மே 26ம் தேதி கணக்குபடி, நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1007 ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. குறிப்பாக, கேரளா, மஹாராஷ்டிரா, டில்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

கேரளாவில் 335 பேர் புதிய தொற்றாளர்களாக கண்டறியப்பட்டு உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்தமாக அம்மாநிலத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 430 ஆக உள்ளது.

இதேபோல மஹாராஷ்டிராவில் 153 பேரும், டில்லியில் 99 பேரும் கொரோனாவின் புதிய தொற்றாளர்களாக கண்டறியப்பட்டு உள்ளனர். இதையடுத்து, மஹாராஷ்டிராவில் 209 பேரும், டில்லியில் 104 பேரும் தற்போது வரை சிகிச்சையில் இருக்கின்றனர்.

குஜராத்தில் 83 பேர், கர்நாடகா 47 பேர், உத்தரப்பிரதேசம் 15 பேர்,மேற்கு வங்கம் 12 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இன்றைய(மே 26) நிலவரப்படி ஒட்டு மொத்தமாக 1007 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us
      Arattai