ADDED : ஜூலை 22, 2024 09:19 AM

புதுடில்லி: இந்தியா- பாகிஸ்தான் இடையிலான கார்கில் போர் 25 வது நினைவு நாளையொட்டி பிரதமர் மோடி வரும் ஜூலை 26 ல் கார்கில் செல்கிறார். அங்கு நடக்கும் நினைவு நாளில் அவர் பங்கேற்று நினைவு ஸ்தூபியில் மரியாதை செலுத்துகிறார்.
கடந்த 1999-ம் ஆண்டில் காஷ்மீர் மாநிலத்திற்கு உட்பட்ட கார்கில் என்ற இடத்தில் பாக்., ராணுவம் அத்துமீறி நுழைந்தது. இதனையடுத்து நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்றது. போரில் ஏராளமான ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பலியாயினர்.
கார்கிலில் கடும் பனிப்பொழிவில் நடந்த இந்த போரில் உயிர்த்தியாகம் பல செய்து பாகிஸ்தான் படையினரை நமது இந்திய ராணுவ வீரர்கள் விரட்டி அடித்தனர்.
இதனை நினைவு கொள்ளும் வகையில் பிரதமர் மோடி கார்கில் செல்கிறார். ஆண்டுதோறும் அவர் கார்கிலில் தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். கார்கில் போர் முடிந்து இந்த முறை 25 வது ஆண்டு சில்வர் ஜூப்ளி என்பதால் பிரதமர் மோடி செல்ல திட்டமிட்டுள்ளார். அங்கு வீரர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடுகிறார்.