sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பாதாள சாக்கடையில் மீண்டும் வாயு கசிவு ரெட்டியார்பாளையத்தில் பொதுமக்கள் பீதி

/

பாதாள சாக்கடையில் மீண்டும் வாயு கசிவு ரெட்டியார்பாளையத்தில் பொதுமக்கள் பீதி

பாதாள சாக்கடையில் மீண்டும் வாயு கசிவு ரெட்டியார்பாளையத்தில் பொதுமக்கள் பீதி

பாதாள சாக்கடையில் மீண்டும் வாயு கசிவு ரெட்டியார்பாளையத்தில் பொதுமக்கள் பீதி


ADDED : ஜூன் 28, 2024 06:24 AM

Google News

ADDED : ஜூன் 28, 2024 06:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கம்பன் நகரில் பாதாள சாக்கடையில் இருந்து வாயு கசிந்து பரவியதால் மக்கள் அச்சமடைந்தனர்.

புதுச்சேரி, ரெட்டியார்பாளையம், புதுநகர் பகுதி யில், சமீபத்தில் பாதாள சாக்கடை கழிவுநீரில் இருந்து விஷ வாயு தாக்கி, 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் புதுச்சேரியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

அதையடுத்து, ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள பாதாள சாக்கடை செல்லும் பாதைகளை பொதுப்பணித்துறையினர் சுத்தம் செய்து, புதிய 'மேன்ஹோல்'களை அமைத்தனர்.

இந்நிலையில், ரெட்டியார்பாளையம், கம்பன் நகர் பகுதியில் வீடுகளில் துர்நாற்றம் வீசுவதாக, நேற்று இரவு 7:00 மணிக்கு குடியிருப்பு வாசிகள் பொதுப்பணித்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டுக் குழும உறுப்பினர் செயலர் ரமேஷ், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் வீரச்செல்வன், உதவி பொறியாளர் வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகள், அப்பகுதிக்கு விரைந்தனர்.

கம்பன் நகர், 3வது குறுக்கு தெரு முதல், 7வது குறுக்கு தெரு வரை உள்ள குடியிருப்ப பகுதிகளில், சோதனையில் ஈடுபட்டனர்.

பாதாள சாக்கடை செல்லும் 'மேன்ேஹால்'களை திறந்து, வாயுக்களை அளவிடும் கருவிகள் மூலம் ஆய்வு செய்தனர். அதில் இருந்து மீத்தேன் வாயு வெளி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து, சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு உறுப்பினர் செயலர் ரமேஷ் கூறியதாவது:

நேற்று மாலை வீடுகளில் சமையல் காஸ் எரிவாயு போன்ற வித்தியாசமான வாசனை வருவதாக தகவல் வந்தது.

ஆய்வு செய்த போது, மீத்தேன் வாயுவின் வாசனை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மீத்தேன் வாயு, பாதாள சாக்கடையில் அதிக அழுத்தம் இருந்தால் வெளி வரும். அதனால், உயிருக்கு எந்த பாதிப்பும் வராது.

இந்த வாயு குப்பைகள் மற்றும் சாக்கடைகள் மூலமும் வரக்கூடும். பொதுவாக ஹைட்ரஜன் சல்பேட், கார்பன் மோனக்சைடு வாயுவால் மட்டும் பாதிப்பு வரும்.

தற்போது குடியிருப்பு பகுதிகளில் அந்த வாயுக்கள் வெளி வரவில்லை. இது குறித்து பொதுமக்களிடம் தெளிவாக எடுத்துரைத்துள்ளோம்' என்றார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே, அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us