sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மக்கள் மன்ற நிகழ்ச்சியில் 18 மொபைல்கள் ஒப்படைப்பு

/

மக்கள் மன்ற நிகழ்ச்சியில் 18 மொபைல்கள் ஒப்படைப்பு

மக்கள் மன்ற நிகழ்ச்சியில் 18 மொபைல்கள் ஒப்படைப்பு

மக்கள் மன்ற நிகழ்ச்சியில் 18 மொபைல்கள் ஒப்படைப்பு


ADDED : ஜூன் 07, 2025 10:14 PM

Google News

ADDED : ஜூன் 07, 2025 10:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடந்தது. எஸ்.பி., பாஸ்கரன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி முன்னிலை வகித்தனர்.

இதில், 35க்கும் மேற்பட்டோர் சைபர் கிரைம் தொடர்பான புகார் மற்றும் குறைகளை தெரிவித்தனர். தொடர்ந்து, பொதுமக்கள் தவறவிட்ட 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 18 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், எஸ்.பி., பாஸ்கரன் பேசுகையில், 'உடனடி கடன் செயலி மூலம் கடன் பெற்றால், உங்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, நண்பர்களுக்கு அனுப்புவதாக மிரட்டி அதிக பணம் கேட்டு மிரட்டுகின்றனர். ஆகையால் உடனடி கடன் செயலி மூலம் கடன் பெற வேண்டாம். வாட்ஸ் ஆப், டெலிகிராம் குழுக்களில் தெரியாத நபர்கள் கூறும் ஆன்லைன் டிரேடிங் சம்பந்தமான அறிவுரைகளை முற்றிலும் நம்ப வேண்டாம்.

மேலும், சைபர் குற்றம் தொடர்பான ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்தால் 1930, 04132276144, 9489205246 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளவும் என, அறிவுறுத்தினார்.






      Dinamalar
      Follow us
      Arattai