sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பேனர் அறுந்து விழுந்து பா.ஜ., நிர்வாகி படுகாயம்

/

பேனர் அறுந்து விழுந்து பா.ஜ., நிர்வாகி படுகாயம்

பேனர் அறுந்து விழுந்து பா.ஜ., நிர்வாகி படுகாயம்

பேனர் அறுந்து விழுந்து பா.ஜ., நிர்வாகி படுகாயம்


ADDED : செப் 17, 2025 03:47 AM

Google News

ADDED : செப் 17, 2025 03:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பத்தை சேர்ந்தவர் குமரசேரன் மனைவி சுமதி, 50; இவர், பா.ஜ., மாவட்ட நிர்வாகி. நேற்று பழைய துறைமுகம் பகுதியில், நடந்த பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார். பின். வீட்டுக்கு தனது ஸ்கூட்டரில், கடலுார் சாலை, நைனார்மண்டபம் வழியாக மதியம் 2:00 மணியளவில், சென்றார்.

அப்பகுதியில், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிக்கு, ஒருவரை வரவேற்று, சாலையோரத்தில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு பேனர் காற்றில் அறுந்து, ஸ்கூட்டரில் சென்ற சுமதி மீது விழுந்தது. அதில், அவரது கால் பகுதியில், ப டுகாயம் ஏற்பட்டது. அப்பகுதியில் இருந்தவர்கள் உதவியுடன், மருத்துவமனை சென்று சிகிச்சை பெ ற்றார்.

இதுகுறித்த, அவரது கணவர், குமரேசன் கொடுத்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். மரப்பாலத்தில் இருந்து, முருங்கப்பாக்கம் வரை சாலையோரத்தில், தொடர்ந்து, பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

அதனால், போக்குவரத்து இடையூறு மற்றும் விபத்து ஏற்படுத்தி வருவதால், பேனர்கள் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us