ADDED : ஜூன் 28, 2025 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால் : காரைக்கால், கோட்டுச்சேரி சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு சென்ற பொதுமக்களை இருவர் குடிபோதையில் ஆபாசமாக திட்டினர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள், கீழகாசாகுடி, புதுநகர் ராஜ்குமார், 27; திருமுருகன், 31, என, தெரிய வந்தது. அவர்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.