ADDED : ஜூலை 05, 2025 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : வயிற்று வலியால் பெண் ஒப்பந்த துாய்மை பணியாளர் தற்கொலை செய்து கொண்டார்.
சூரமங்கலம் பள்ளிக்கூட வீதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி, 58. ஒப்பந்த துாய்மை பணியாளர். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்தார்.
நேற்று முன்தினம் வயிற்று வலி அதிகமானதால், இரவு 8:00 மணியளவில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் பழனிவேல் கொடுத்த புகாரின் பேரில் மடுகரை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.