sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் விபத்தை தடுக்க இரும்பு தடுப்பு

/

தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் விபத்தை தடுக்க இரும்பு தடுப்பு

தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் விபத்தை தடுக்க இரும்பு தடுப்பு

தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் விபத்தை தடுக்க இரும்பு தடுப்பு


ADDED : ஜூலை 05, 2025 01:02 AM

Google News

ADDED : ஜூலை 05, 2025 01:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்:சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள அபாய பள்ளங்களில், வாகனங்கள் விழுந்து விபத்துகள் ஏற்படாமல் தடுக்க, துருப்பிடிக்காத இரும்பு கம்பிகளால் தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

செங்கல்பட்டு மாவட்டத்தில், அச்சிறுபாக்கம் அருகே உள்ள ஆத்துார் சுங்கச்சாவடி முதல், செங்கல்பட்டு பரனுார் சுங்கச்சாவடி வரை, சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இரு மார்க்கத்திலும், சாலையோரம் கிணறுகள் மற்றும் ஏரிகள் அதிக அளவில் உள்ளன.

நீர் வரத்து கால்வாய்கள், பாலங்கள், அபாயகரமான பள்ளங்கள் உள்ளன. இரவு நேரங்களில், வாகன ஓட்டிகளின் துாக்க கலக்கம் மற்றும் விபத்துகளின் போது, வாகனங்கள் சாலையில் இருந்து தடுமாறி, சாலையோரம் உள்ள பள்ளங்களில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின்றன.

இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு செய்து, தடுப்புகள் அமைக்க முடிவு செய்தனர்.

இதையடுத்து, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இரு மார்க்கத்திலும், சாலையோரங்களில் துருப்பிடிக்காத இரும்பாலான கம்பிகளால், தடுப்புகள் அமைத்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us