sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நெசப்பாக்கம் சந்திப்பில் தொடரும் விபத்துகள்

/

நெசப்பாக்கம் சந்திப்பில் தொடரும் விபத்துகள்

நெசப்பாக்கம் சந்திப்பில் தொடரும் விபத்துகள்

நெசப்பாக்கம் சந்திப்பில் தொடரும் விபத்துகள்


ADDED : ஜூன் 01, 2024 12:39 AM

Google News

ADDED : ஜூன் 01, 2024 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெசப்பாக்கம், நெசப்பாக்கம், மூன்று முனை சந்திப்பில் சிக்னல் மற்றும் போக்குவரத்து போலீசார் இல்லாததால், விபத்துக்கள் தொடர்கின்றன.

எம்.ஜி.ஆர்., நகரில் அண்ணா பிரதான சாலை உள்ளது. இது, கே.கே., நகர், அசோக் நகர், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் முக்கிய பேருந்து சாலையாக உள்ளது.

நெசப்பாக்கம் லிங்க் சாலை, அண்ணா பிரதான சாலை மற்றும் கே.கே., நகரில் இருந்து வரும் முனுசாமி சாலை ஆகியவை சந்திக்கும் மூன்று முனை சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பில், 'சிக்னல்' வசதியில்லை. இங்கு போக்குவரத்து போலீசாரும் பணியில் இருப்பதில்லை. இதனால் காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில், மூன்று சாலைகளில் இருந்தும் வாகனங்கள் முட்டிக்கொண்டு நிற்பதால், இந்த சந்திப்பு ஸ்தம்பித்து விடுகிறது. இதனால், ஆம்புலன்ஸ் மற்றும் அவசரமாக செல்லும் பயணியர் பாதிக்கப்படுகின்றனர்.

அத்துடன், இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. நேற்று மூன்று முனை சந்திப்பில் இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

அதிர்ஷ்டவசமாக, இரு பைக்கில் பயணித்தவர்கள் உயிர்தப்பினர்.

தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க, போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us