sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஏலச்சீட்டு நஷ்டத்தால் தீக்குளித்த பெண் பலி

/

ஏலச்சீட்டு நஷ்டத்தால் தீக்குளித்த பெண் பலி

ஏலச்சீட்டு நஷ்டத்தால் தீக்குளித்த பெண் பலி

ஏலச்சீட்டு நஷ்டத்தால் தீக்குளித்த பெண் பலி


ADDED : ஜூலை 28, 2024 12:47 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:திருமங்கலம் ஆர்.வி.என்.நகரைச் சேர்ந்தவர் ஷியாமளா 50; இவரது கணவர் இறந்து விட்டார். ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி, மகன் திருமங்கலத்திலும், மகள் மண்ணிவாக்கத்திலும் வசிக்கின்றனர்.

திருமங்கலத்தில் தனியாக வசித்து வந்த ஷியாமளா, தீபாவளி சீட்டு மற்றும் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். கடந்த 2017ல் தீபாவளி சீட்டு மற்றும் ஏலச்சீட்டில் நஷ்டம் ஏற்பட்டதால், பயனாளிகளுக்கு பணத்தை திருப்பித் தராமல் இழுத்தடித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள், ஷியாமளாவிடம் பணத்தைக் கேட்டு, தினமும் வீட்டிற்கு வந்துள்ளனர். இதையடுத்து, மண்ணிவாக்கத்தில் உள்ள மகள் வீட்டில் ஷியாமளா தலைமறைவாக வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

பணத்தை இழந்தவர்களுக்கு, நேற்று முன்தினம் பணம் கொடுப்பதாக ஷியாமளா வாக்களித்துள்ளார். அதற்கான பணம் கடனாகக் கேட்டும் கிடைக்கவில்லை என தெரிகிறது. விரக்தியில் இருந்த ஷியாமளா, நேற்று முன்தினம் மதியம், திருமங்கலம் காவல் நிலையம் அருகில், பள்ளி சாலை - 100 அடி சாலையின் நடைபாதையில், சிறிய குடிநீர் பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

அவ்வழியாக சென்றவர்கள், போலீசாருடன் சேர்ந்து அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, 90 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த ஷியாமளா, நேற்று அதிகாலை 4:00 மணிக்கு உயிரிழந்தார். இதுகுறித்து, திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us