sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பள்ளம் எடுத்து கிடப்பில் போடப்பட்ட பணி வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பரிதவிப்பு

/

பள்ளம் எடுத்து கிடப்பில் போடப்பட்ட பணி வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பரிதவிப்பு

பள்ளம் எடுத்து கிடப்பில் போடப்பட்ட பணி வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பரிதவிப்பு

பள்ளம் எடுத்து கிடப்பில் போடப்பட்ட பணி வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பரிதவிப்பு


ADDED : மார் 17, 2025 11:54 PM

Google News

ADDED : மார் 17, 2025 11:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழிங்கநல்லுார் ஓ.எம்.ஆரில் மெட்ரோ ரயில் பணி நடக்கிறது. இதில், சோழிங்கநல்லுார் சந்திப்பில் நடைபாதை, வாகனங்கள் மற்றும் இரண்டடுக்கு மெட்ரோ ரயில் நிலையம் என, நான்கு அடுக்கு மேம்பாலம் அமைகிறது.

இதற்காக, சுற்றியுள்ள கட்டடங்கள் நில ஆர்ஜிதம் செய்யப்படுகிறது. இதனால் சாலை மிகவும் சுருங்கியதால், வாகன நெரிசல் ஏற்படுகிறது.

இந்நிலையில், அதே சந்திப்பில் கேபிள்கள் மாற்றி அமைக்க, 10 நாட்களுக்கு முன் பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், பள்ளத்தோடு பணி நிறுத்தப்பட்டது.

இதனால், சோழிங்கநல்லுார் சந்திப்பில் பீக் ஹவர்ஸ் நேரத்தில் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. சாலையை கடக்கும் பாதசாரிகளும் தடுமாறுகின்றனர்.

பொதுமக்கள் பல்வேறு வகைகளில் சிரமப்படுவதால், பணியை உடனே முடிக்கும் வகையில் பள்ளங்கள் தோண்ட வேண்டும் என, அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். ஆனால், பொதுமக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல், சேவைத்துறைகள் அவர்களுக்கு தோணும்போது பள்ளம் எடுத்து, தாமதமாக பணி செய்கின்றனர்.

உயர் அதிகாரிகள் தலையிட்டு, பொதுமக்கள் சிரமத்தை போக்கும் வகையில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us