sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

டூ - வீலர்கள் திருடிய வாலிபர்கள் சிக்கினர்

/

டூ - வீலர்கள் திருடிய வாலிபர்கள் சிக்கினர்

டூ - வீலர்கள் திருடிய வாலிபர்கள் சிக்கினர்

டூ - வீலர்கள் திருடிய வாலிபர்கள் சிக்கினர்


ADDED : செப் 18, 2025 06:11 PM

Google News

ADDED : செப் 18, 2025 06:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை :வெவ்வேறு இடங்களில் பைக் திருடிய இருவரை, போலீசார் கைது செய்தனர்.

திருவல்லிக்கேணி, அயோத்தியா நகரைச் சேர்ந்தவர் செந்தில், 42. கடந்த 6ம் தேதி காலை திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையில் உள்ள 'ஆவின்' பாலகத்திற்கு, தன் 'ஹீரோ ஸ்பிளண்டர்' பைக்கில் சென்றார். பால் வாங்கி விட்டு வந்தபோது, அவரது பைக் திருடு போனது.

அதேபோல, திருவல்லிக்கேணி, நீலம் பாஷா தர்காபுரத்தைச் சேர்ந்த புருஷோத்தமன், 38, என்பவரது, 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டர், கடந்த 8ம் தேதி திருடு போனது.

மேற்கண்ட இரு சம்பவங்கள் குறித்த புகாரையடுத்து, ஐஸ்ஹவுஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த செல்வகுமார், 29, என்பவர் பைக் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் ராயப்பேட்டை, சைவமுத்தையா முதல் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 56; பெயின்டர். கடந்த 10ம் தேதி இரவு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த அவரது 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டர் திருடு போனது.

ஐஸ்ஹவுஸ் போலீசாரின் விசாரணையில், கோபாலபுரத்தைச் சேர்ந்த ஆனந்த், 23, என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், திருடிய பைக்கை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us