/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீஸ் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி
/
போலீஸ் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி
ADDED : ஜூலை 14, 2024 01:32 AM
கோவை;கோவை மாநகர போலீஸ் அதிகாரிகளுக்கு, 9 எம்.எம்., பிஸ்டல் துப்பாக்கி சூடும் பயிற்சி நேற்று நடந்தது.
கோவை மாநகரக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், போலீஸ் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்க அறிவுறுத்தியிருந்தார். இதன்படி, கோவை ரைபிள் கிளப்பில், எஸ்.ஐ., முதல் ஏ.சி., வரையிலான கோவை மாநகர காவல்துறை அதிகாரிகளுக்கு, 9 எம்.எம்., பிஸ்டலில் துப்பாக்கிச் சூடும் பயிற்சி நடத்தப்பட்டது.
இதில், 9 ஏ.சி., க்கள், 22 இன்ஸ்பெக்டர்கள், 40 எஸ்.ஐ., க்கள் என, மொத்தம், 71 பேர் பங்கேற்றனர். கடந்த சில தினங்களுக்கு முன், பங்கேற்பாளர்களுக்கு ஸ்டிரிப்பிங், அசெம்பிளிங், லோட் மற்றும் அன்லோட், இலக்கு, சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்பு, பாதுகாப்பு பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது.