sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கம்பீரமாய் ஒரு வாகனம்

/

கம்பீரமாய் ஒரு வாகனம்

கம்பீரமாய் ஒரு வாகனம்

கம்பீரமாய் ஒரு வாகனம்


ADDED : ஜூலை 14, 2024 10:56 PM

Google News

ADDED : ஜூலை 14, 2024 10:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பீரமாய் ஒரு வாகனம்


வாகனங்களுக்கான பிரிவில், கம்பீரமாய் நின்றிருந்தது ஒரு வாகனம். கரும்பு அறுவடை செய்யக்கூடிய நவீன இயந்திரம். பெயர் கார்டர். ஒரு மணி நேரத்தில் 20 முதல் 25 டன் வரை கரும்பு அறுவடை செய்ய முடியுமாம். அசோக் லேலண்ட் என்ஜின் கொண்டது. ஒரு மணி நேரம் அறுவடை செய்ய, 17 லிட்டர் டீசல் மட்டுமே பிடிக்குமாம். கரும்பு அறுவடையில் ஆட்கள் பற்றாக்குறையை தவிர்க்க, இந்த 'கார்டர்' நிச்சயம் கைகொடுக்கும் என்று, நம்பிக்கை தெரிவித்தனர்.

பாயில் வளர்க்கலாம் நெல்


இந்த அரங்கில், நெல் நாற்றுகளை தாங்களே வளர்த்து, அதை நெல் பாய் வாயிலாக, மண் இல்லாமல் விளைவிக்க முடியும் என்கின்றனர். வளர்ந்திருக்கும் நெல் நாற்றுகளை வேறொரு இடத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்றாலும், இந்த நெல் பாயை அப்படியே சுருட்டிக் கொண்டு சென்று, விரும்பி இடத்தில் வளர்க்கலாம்.

தண்ணீர் தொட்டி


பிரம்மாண்டமாய் கவர்கின்றன தண்ணீர் தொட்டிகள். மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள், 200 லிட்டரில் துவங்கி, 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு வரை காட்சிக்கு வைத்திருந்தனர். கீழ்நிலை நீர் தொட்டியையும், சிமென்டால் இனி கட்ட வேண்டாம். அதற்கும் தொட்டி இருக்கிறது; அந்த தொட்டியை வைத்து விடலாம். மண்ணாலும் மூடிக் கொள்ளலாம்.

வெட்டி வேரு வாசம்


வெட்டி வேரின் மகிமை, இப்போதிருக்கும் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. அதை உணர்த்தியது ஒரு அரங்கு. உடல் நலத்துக்கு நல்லது செய்யும் வெட்டி வேர் என்று, அரங்கில் இருந்தவர்கள் சொல்லிக் கொண்டே, விளாமிச்ச வேர் மாலை மற்றும் கார் பிரஷ், வெட்டிவேர் முகப்பவுடர், குளியல் சோப், கொசுவர்த்தி என, ஏராளமான பொருட்களை விளக்கினர். வாசத்தால் பலரை திரும்பி பார்க்க வைத்தது அரங்கு.






      Dinamalar
      Follow us