/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆழியாறு நீர்மட்டம் 115 அடியாக உயர்வு; இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
/
ஆழியாறு நீர்மட்டம் 115 அடியாக உயர்வு; இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
ஆழியாறு நீர்மட்டம் 115 அடியாக உயர்வு; இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
ஆழியாறு நீர்மட்டம் 115 அடியாக உயர்வு; இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
ADDED : ஜூலை 03, 2025 10:34 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, ஆழியாறு அணை நீர் மட்டம், 115 அடியாக உயர்ந்ததையடுத்து, இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து, நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பி.ஏ.பி., பாசனத்தில், முக்கிய அணையான ஆழியாறு அணைமொத்தம், 120 அடி உயரம் கொண்டது. அணையில் இருந்து, பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கும், ஒப்பந்தப்படி கேரளாவுக்கும் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சிலவாரங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து, நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த, 21ம் தேதி அணை நீர்மட்டம் 100 அடிக்கு உயர்ந்தது.
தொடர் நீர்வரத்தால், நேற்று காலை, 115.20 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 728 கனஅடி நீர்வரத்து இருந்தது; வினாடிக்கு, 176 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில்,'ஆழியாறு அணையில், நீர்மட்டம் 110 அடியை எட்டியதைடுத்து, கடந்த, 28ம் தேதி முதல்நிலை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால், நீர்மட்டம், 115 அடிக்கு உயர்ந்ததும், ஆழியாறு ஆற்றங்கரையோர வசிக்கும் கிராம மக்களுக்கு, இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.அணை முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன,' என்றனர்.