sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

100 சவரன் வரதட்சணை கேட்ட கணவன் குடும்பம் மீது வழக்கு

/

100 சவரன் வரதட்சணை கேட்ட கணவன் குடும்பம் மீது வழக்கு

100 சவரன் வரதட்சணை கேட்ட கணவன் குடும்பம் மீது வழக்கு

100 சவரன் வரதட்சணை கேட்ட கணவன் குடும்பம் மீது வழக்கு


ADDED : செப் 13, 2025 11:11 PM

Google News

ADDED : செப் 13, 2025 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கோவையில், 100 சவரன் வரதட்சணை கேட்ட கணவன் மற்றும் குடும்பத்தினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

கோவை, டி.வி.எஸ்.நகரை சேர்ந்தவர் குமாரதேவ். இவரது மகள் ரம்யாஸ்ரீ, 34, பெங்களூருவில் வசிக்கும் உறவினர் ஜெகத்ஜித்தை பெற்றோர் சம்மதத்துடன், 2024, பிப்., 22ல் திருமணம் செய்து கொண்டார்.

மாப்பிள்ளை வீட்டில், 200 சவரன் நகை வரதட்சணையாக கேட்டனர். ரம்யாஸ்ரீ பெற்றோர், 100 சவரன் நகை கொடுத்தனர். திருமணமான சில மாதங்களில், கூடுதலாக 100 சவரன் வரதட்சணை கேட்டு கணவரும், அவரது பெற்றோரும் ரம்யாஸ்ரீயை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தினர். ரம்யாஸ்ரீ, கோவை மாவட்ட சமூக நலத்துறை அதிகாரியிடம் புகார் அளித்தார். புகார் மனு, கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீசாருக்கு அனுப்பப்பட்டது.

விசாரித்த போலீசார், ஜெகத்ஜித் மற்றும் அவரது பெற்றோர் மீது, வரதட்சணை கொடுமை சட்டப்பிரிவின் கீழ், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us