/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருமண பேனரில் போட்டோ மிஸ்சிங் வாலிபரை தாக்கிய நால்வர் மீது வழக்கு
/
திருமண பேனரில் போட்டோ மிஸ்சிங் வாலிபரை தாக்கிய நால்வர் மீது வழக்கு
திருமண பேனரில் போட்டோ மிஸ்சிங் வாலிபரை தாக்கிய நால்வர் மீது வழக்கு
திருமண பேனரில் போட்டோ மிஸ்சிங் வாலிபரை தாக்கிய நால்வர் மீது வழக்கு
ADDED : ஜூன் 14, 2024 06:36 AM
விருத்தாசலம்: திருமண பேனரில் போட்டோ போடவில்லை என வாலிபரை தாக்கிய நால்வர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விருத்தாசலம் ஆலடி ரோட்டை சேர்ந்தவர் முருகன் மகன் அஜித், 22. இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் நடந்த தனது நண்பரின் திருமண நிகழ்ச்சிக்கு, நண்பர்கள் சிலரின் போட்போவை போட்டு பேனர் வைத்துள்ளார்.
அதில், அதேபகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன், வெங்கடேசன், அனீஸ், ஆதி ஆகிய நான்கு பேரின் போட்டோக்களை போடாமல் பேனர் வைத்துள்ளார்.
இதில், ஆத்திரமடைந்த நால்வரும் அஜீத்திடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவரை திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் நால்வர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.