ADDED : ஜூலை 13, 2024 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேப்பூர: வேப்பூர் அருகே பெண்ணிடம் 5 சவரன் தாலிச் செயினை பறித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
வேப்பூர் அடுத்த நல்லுாரைச் சேர்ந்தவர் வேலு மனைவி லட்சுமி, 65; இவர் நல்லுார் வார சந்தை எதிரே பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
நேற்று மதியம் 12:00 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் கடையில் பொருள் வாங்குவது போல் பேச்சு கொடுத்து கொண்டு, லட்சுமி அணிந்திருந்த 5 சவரன் தாலிச் செயினை பறித்து சென்றார்.
புகாரின் பேரில், வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபரை தேடி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.