ADDED : ஜூலை 13, 2024 12:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் வி ஸ்கொயர் மாலில் இறைவி உயர்தர சைவ ஓட்டல் திறப்பு விழா நடந்தது.
மால் உரிமையாளர் அனிதா ரமேஷ் தலைமை தாங்கி, ஓட்டலை திறந்து வைத்தார். சரவணன் முன்னிலை வகித்தார். ஓட்டல் உரிமையாளர் குமார் வரவேற்றார். விழாவில், செல்வம், வாடிக்கையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதுகுறித்து உரிமையாளர் குமார் கூறுகையில், 'இங்கு, அனைத்து விதமான உயர்தர சைவ உணவுகள், சுத்திரிக்கப்பட்ட தண்ணீர் மூலமாக தயாரிக்கப்பட்டு சுவையாகவும், தரமாகவும் மற்றும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் மளிகைப் பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது.' என்றார். எழில் நன்றி கூறினார்.