ADDED : ஜூன் 16, 2024 06:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே மேல்பாதி திரவுபதியம்மன் கோவில் தீமிதி விழா நடந்தது.
நெல்லிக்குப்பம் மேல்பாதியில் உள்ள திரவுபதியம்மன் கோவில் திரு விழா கடந்த 12ம் தேதி துவங்கியது. அதனை தொடர்ந்து, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை அர்ஜூனன் சமேதராய் திரவுபதியம்மன் மற்றும் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில், தீக்குண்டம் முன்பு எழுந்தருளினர்.
அதையடுத்து, பக்தர்கள் வேண்டுதலின்பேரில், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.