/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி துவக்கம்
/
மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி துவக்கம்
ADDED : ஜூன் 16, 2024 06:09 AM

கடலுார்: கடலுார் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று துவங்கிய மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் 16 அணிகள் பங்கேற்றுள்ளது.
கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான கிரிக்கெட் விளையாட்டுப் போட்டி கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று துவங்கியது. துவக்க நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார், போட்டியை துவக்கி வைத்தார்.
போட்டியில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், விருத்தாசலம் பகுதிகளை சேர்ந்த 16 அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டிகள் அனைத்தும் நாக் -அவுட் முறையில் நடக்கிறது. போட்டிகள் காலை 8:30 மணி முதல் மதியம் 12:30 வரை நடக்கிறது. இறுதி போட்டி வரும் 22ம் தேதி நடக்கிறது.
ஏற்பாடுகளை கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் கூத்தரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்துள்ளனர்.