/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காராமணிக்குப்பம் வாரச்சந்தை குத்தகை ரூ.1.25 லட்சம் கூடுதல் ஏலம்
/
காராமணிக்குப்பம் வாரச்சந்தை குத்தகை ரூ.1.25 லட்சம் கூடுதல் ஏலம்
காராமணிக்குப்பம் வாரச்சந்தை குத்தகை ரூ.1.25 லட்சம் கூடுதல் ஏலம்
காராமணிக்குப்பம் வாரச்சந்தை குத்தகை ரூ.1.25 லட்சம் கூடுதல் ஏலம்
ADDED : ஜூன் 14, 2024 06:29 AM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தில் தமிழக இந்து அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது.
இக்கோவிலுக்கு சொந்தமான 5 ஏக்கர் இடம் கடலுார் பண்ருட்டி சாலையை ஒட்டி காராமணிக்குப்பத்திலேயே உள்ளது.இங்கு வாரந்தோறும் திங்கட்கிழமை வாரச்சந்தை நடப்பது வழக்கம்.
இந்த சந்தையில் கடைபோடும் வியாபாரிகளிடம் கட்டணம் வசூலிக்க தனியாருக்கு குத்தகைக்கு விடுவது வழக்கம்.இந்த குத்தகை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை ஒரு ஆண்டுக்கு நடைமுறையில் இருக்கும்.கடந்த ஆண்டு குத்தகை ரூ. 6 .25 லட்சத்துக்கு ஏலம் போனது.இந்த குத்தகை காலம் வரும் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
வரும் ஆண்டுக்கான குத்தகை ஏலம் நேற்று உதவி ஆணையர் சந்திரன்,செயல் அலுவலர் தேவகி முன்னிலையில் நடந்தது.கோண்டூரை சேர்ந்த சவுமியா என்பவர் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார்.இது கடந்த ஆண்டு ஏல தொகையை விட 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கூடுதலாகும்.